‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாய்லாந்து பிரஜை!

போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கை இன்று (19) அதிகாலை இடம்பெற்றது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபரிடம் இருந்து 79 மில்லியன் ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் 910 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவர் தனது பயணப் பையில் இனிப்புகளுடன் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து எடுத்து வந்துள்ளார்.

தாய்லாந்தில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார் லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கைதான சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply