
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படிருந்தது.
இந்தநிலையில் இன்றையதினம் (19) முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளார்.
இந்தநிலையில், மேற்குறித்த வழக்கு தொடர்பில் இன்றையதினம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.