மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படிருந்தது.

இந்தநிலையில் இன்றையதினம் (19) முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் அவரை மே 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (19) குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக அவர் சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply