
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் (19) கைது செய்யப்பட்டர்.
மிலான் ஜயதிலக்க தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில், காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.