தெஹிவளையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச்ச சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு 13 ப்ளுமென்டல் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று முன்தினம் இரவு நாராஹென்பிட்ட கிங்ஸ் தனியார் வைத்திசாலைக்கு அருகில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply