மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கட்டுபோத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால், கட்டுபோத்த நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்று (19) மதியம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கட்டுபோத்த, ரதலியகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கட்டுப்பொத்த பகுதியில் நேற்று (19) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும், இரண்டு தாய்மார்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

சாரதி மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்துடன், குறித்த பேருந்தும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது.

சந்தேக நபர் இன்று (20) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply