முச்சக்கரவண்டி திருட்டு சம்பவம்- தேடப்பட்டு வந்த நபர் கைது!

முச்சக்கரவண்டி திருட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெள்ளம்பிட்டி சங்கீத செவண மாடி குடியிருப்பு தொகுதி அருகே வைத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் வெள்ளம்பிட்டி மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் இவரால் திருடப்பட்ட இரண்டு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply