
உப்பை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை சுகாதார அமைச்சின் அனுமதிப் பெற்ற எந்தவொரு இறக்கமதியாளரும் அயடீன் கலக்காத மற்றும் தூள் உப்பை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெற்றிக் தொன் தூள் உப்பு இன்று (20) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.