
மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
குறித்த போராட்டம் மட்டக்களப்பு, பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக இடம்பெற்றது.
வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்கள் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.
எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்றுகூடிய தற்காலிக ஊழியர்கள்,
அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்கு”,
“14 நாள் மருத்துவ விடுப்பு வழங்கு”,
“ஏனைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எங்களுக்கும் வழங்கு”,
“ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு”
முதலான பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் காந்தி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பகல் 12.00 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டம் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.