யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையால் நேற்று (20) நடைபெற்றது.

யாழ். மாவட்டச் செயலகத்தின் அரசாங்க அதிபர் அலுவலகத்தில், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றிமுடிக்க வேண்டிய தேவைப்பாடு குறித்து யாழ். மாவட்ட அரச அதிபர் ம. பிரதீபன் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அதற்குரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அரச அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply