
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல் உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.