
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்கு மூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (21) ஆஜராகியுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய, ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
குறித்த வழக்கு நேற்று (20) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடுவதற்கு நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
அதன்படி, நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.