தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

உள்ளூராட்சி சபையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply