
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 168,000 சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மன்னார் மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகைளைச் சேர்ந்த 22 மற்றும் 67 வயதுடைய இருவரோடு, சென்னையைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பனா மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.