
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தகாத குறுஞ்செய்திகளை மெசஞ்சர் மூலம் அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.
அதன்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபர், சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.