
அண்மைக்காலமாக இல்லங்கையின் தென் மாகாணத்தில் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகி வருகின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்ததுடன், பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த ஆய்வு நடவடிக்கையின் பின்னர் குற்ற செயல்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.