
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.