
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம்.
அதிகாரபூர்வமற்ற வகையில் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய வேலை மட்டும்தான் உள்ளது.
எமது மேயரும் பதவியேற்க தயாராக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.