
பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.
நேற்று (22) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபையில் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, குறித்த பதவி 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய கணக்காய்வாளர் நாயகத்திற்கு முன்மொழிந்த பெயருக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கவில்லை.
இதன்படி பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீட்டிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரசியலமைப்புச் சபையிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.