
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக, சபாநாயகர் விக்ரமரத்னவினால் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படும் போது சபாநாயகர் இதனை அறிவித்தார்.
கடந்த மே 20ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றபோது, சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இந்த மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த விசாரணை குழுவின் தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.