தாதியர் சேவையில் இணைக்கப்பட்டோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை!

தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் நாளை (24) நடைபெறுவுள்ளது.

நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

அத்துடன் இந்த நிகழ்வின் போது, தாதியர் சேவையில் 79 விசேட தர அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்பட உள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்கும் விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply