
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பயணம் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த ஜேர்மன் பயணம் முதல் ஐரோப்பிய பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தனது உத்தியோகபூர்வ முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கும், பின்னர் சீனாவிற்கும், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.