நாட்டை வந்தடையவுள்ள உப்பு கப்பல்!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் கடந்த புதன்கிழமை (21) இரவு நாட்டிற்கு வரவிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும் இன்றையதினம் 3,050 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய உப்பு தொகுதி இலங்கையை வந்தடையும் என்று தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படுகின்ற உப்பு, சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக அமையுமெனவும், அத்துடன் எதிர்வரும் ஒருவார கால பகுதிக்குள் உப்பின் விலையை 50 சதவீதத்தால் குறைக்க முடியும் என்றும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply