
யாழ்ப்பாணம் மாநகர சபையினர் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
வீதித்தடை தொடர்பாக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (2025.05.25) முதல் யாழ் பஸ்தரிப்பு நிலைய மதகு புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்படவுள்ளதால் வைத்திய சாலை வீதியையும், மின்சாரநிலைய வீதியையும் இணைக்கும் வைரவர் கோவில் வீதியினை பகுதியளவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் போக்குவரத்தினை சிரமம் இன்றி மேற்கொள்ள மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.