
சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது 76ஆவது வயதில் இன்று (24) அதிகாலை காலமானார்.
மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
‘இலங்கை சினிமாவின் ராணி’ என அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா நாட்டின் கலை மற்றும் சினிமாவில் மிகவும் மதிக்கப்படும், செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.