இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து- 20 பேர் காயம்!

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 23 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 18 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 23 பயணிகள் காயமடைந்து

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply