
நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 23 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 18 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 23 பயணிகள் காயமடைந்து
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.