நாடாளுமன்றில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை மேம்படுத்த தீர்மானம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் நாடாளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகைமொழியிலான உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply