
கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்திருந்த நிலையில் குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏலவே கனடாவின் பிரம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி தமிழின படுகொலை நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கனடாவில் மற்றுமொரு தூபியை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.