
டுபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி பயண ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி பயண ஆவணங்கள் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பில் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கெஹல்பத்தர பத்மே முக்கிய சந்தேக நபராககுற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.