முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வா தொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 153 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் நிதியை சேர்த்ததாக தெரிவித்து, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23(1)(a) இன் கீழ், சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 7 பகுதியில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான நிலம் கொள்வனவு செய்தமை, கடவத்தையின் தலுபிட்டிய பகுதியில் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்தை கையகப்படுத்தியமை மற்றும் அவரது மகன் மாலக சில்வாவுக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு ஜீப் வாங்கியுள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply