
யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட போது 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் குறித்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.