
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த வேலைநிறுத்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.