நாட்டில் குற்றவாளிகளை கைதுசெய்ய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு!

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்ற செயல்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

குறித்த குழு தென் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தலைமையில் செயல்படுகின்றது.

இந்த குழுவில் 46 அதிகாரிகள் இணைக்கப்படவுள்ளதுடன், இதில் தங்காலை, மாத்தறை பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 15 நெடுஞ்சாலை மோட்டார் சைக்கிள்கள் என்பன உள்ளடக்கப்படவுள்ளன.

சிறப்பு மோட்டார் சைக்கிள் குழுவின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் நாட்டின் குற்ற செயல்கள் அதிகமாக இடம்பெறும் பகுதிகளில் அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ விளக்கமளிப்பு விழா மே 26, அன்று மாத்தறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply