முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்”

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (28) மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவர்கள் முதலான பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட மீனவர்கள் முப்பது பேருக்கும், அதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட சமாசங்களின் சங்கத்தினருக்கும் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply