
பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (29) காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியை பயன்படுத்தி பலமுறை துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் கடை உரிமையாளரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வௌிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நிலங்கவின் நெருங்கிய உதவியாளர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீப நாட்களாக, நிலங்க மற்றும் பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மாலமுல்ல மற்றும் மாதுபிட்டிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் இந்த வருடத்தில் மாத்திரம் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.