
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும், ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்தவை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு, விசேட வைத்தியரின் பரிசோனையைத் தொடர்ந்து, அவரை மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.