
இலங்கை வங்கியின் அனைத்து கிளை ஊழியர்களும் போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மதியம் முதல் இலங்கை வங்கியின் அனைத்து கிளை வலையமைப்பையும் மூடிவிட்டு, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் தமது கோரிக்கை கள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.