
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இதற்கான வகுப்புகள் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி சுமார் மூன்று மாத காலங்கள் இடம்பெறவுள்ளன.
சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை குறித்த வகுப்பு நடைபெறவுள்ளது.
இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.
யோகக்கலை அடிப்படை கற்கைநெறியை பயிலவிரும்புவோர் அன்றையதினம் நேரடியாக வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.