இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கிய சந்திப்பு இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply