
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் ஆனது இன்றும் தொடர்கிறது.
ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த புதன்கிழமை (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.