கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று (30) அதிகாலை குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளை மூன்று பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்து வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply