இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக தொடர்புடைய தரப்பினர் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply