ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர்!

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (29) மேற்கொண்டார்.

இதன்போது தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அமைச்சர், தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply