
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மறுசீரமைப்பு செயன்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.