
எஹெலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றது.
எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துரன சந்திப்பில் உள்ள ரயில் வீதிக்கு அருகில் மூன்று பேர் மீது குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தமல்கொட, கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.