யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் பொருளுடன் இளைஞன் கைது!

யாழ். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கெலும் ஆகியோரின் வழிபடுத்தலின் கீழ் வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த இளைஞனுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply