
வெல்லவாய பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்று, கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கிய வேளையில், குறித்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மைத்துனரான 45 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.