முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்திராணி பண்டார, அமைச்சராக இருந்த காலப் பகுதியில் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை நியமித்ததாகவும், சட்டவிரோதமாகத் தனது நண்பர்களைப் பல்வேறு பதவிகளுக்கு நியமித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ குற்றத்திற்காக அவருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரதிவாதி தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply