தேசிய பொசன் வாரம் இன்று!

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது.

அதன்படி, தேசிய பொசன் வாரம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

தேசிய பொசன் பண்டிகையை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பொசன் விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆர்.விமலசூரிய தெரிவித்தார்.

பொசன் காலத்தில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஒரு விசேட கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ள இடங்கள், தானசாலைகள் (தன்சல்) நடைபெறும் இடங்கள், முதலுதவி மையங்கள் உள்ள இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த செயலியை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக கே.பி.ஆர். விமலசூரிய மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply