சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply